பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும்
சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது.
தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி வெளியிடும் சக்தி உண்டோ என்று
கலங்கினேன். தமிழ் பண்டிதையான என் தாயாரால் இத்தொண்டர்கள் கதை என்
பால்யத்தில் பிசைந்து போட்ட தயிர் சாதத்தோடு சொல்லப்பட்டிருக்கின்றது.
கைகாள் கூப்பித் தொழீர் என்பது காலையில் தினமும் பாட கற்றுத்தரப்பட்டது.