இப்புத்தகத்தில் நீங்கள் யாவரும் அறிந்த கருத்தினை ஆராய்ச்சி நோக்கில் அனுபவச் சிந்தனையுடன் தொகுத்தளித்துள்ளேன். ஜோதிடக் கலையை நுனிப் புல் மேய விரும்பாத அறிவார்ந்த நெஞ்சங்களின் அறிவுப் பசிக்கு இந்நூல் அறுசுவை விருந்தாகும் எனப் பணிவன்புடன் கூறிக் கொள்கிறேன். இந்நூலில் பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச் சார பலத்தைக் கொண்டு எப்படிப் பலன் அறிவது என்ற முதிர்நிலை ஆராய்ச்சிக்கு ஜோதிட அனுபவம் முற்றிலும் இல்லாதவர்களுக்கும் கூட ஒரு ராஜபாட்டை அமைத்துள்ளேன். இளமைக் காலத்திலிருந்தே ஜோதிடக் கலையில் ஆராய்ச்சி நோக்குடைய நான் எம் இருபதாண்டு கால ஜோதிட வாழ்க்கையில் கிடைத்த ரகசியங்களைக் கூறியுள்ளேன்.