உணவு நாவிற்கு ருசி தருவதாக மட்டுமன்றி உடலுக்கு ஊறு செய்யாததாகவும், உடல் பேணத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்னும் கருத்துடனேயே நமது முன்னோர்கள் இயற்கை உணவான காய்கறிகளையும் கீரை வகைகளையும் பெரிதும் விரும்பி உண்டு வந்தனர். புலால் ஒன்றைத் தவிர வேறு எதையுமே உணவு என்று கருதாது இருந்து வந்த மேல் நாட்டினர்கூட இன்று மரக்கறி உணவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ''காய்கறிகளையும், கீரை வகைகளையும் உண்ணுங்கள். அவைகள் உங்களைப் பலவகையான நோய்களிலிந்தும் காப்பாற்றும் திறன் கொண்டவை'' என்று பெரிதும் எழதியும் வருகின்றனர்.