மனித வாழ்க்கையில் சிறார் பருவம் மிக முக்கிய இடத்தைப் பெறுவது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பொருந்தி வாழ்வதற்கான அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் கற்றுக் கொடுக்கும் காலமிது. பாடல்கள்,கதைகள், விடுகதைகள்,பழமொழிகள்,பழக்க வழக்கங்கள்,நம்பிக்கைகள்,வழிபாடுகள்,சடங்குகள்,கலைகள்,விளையாட்டுகள் முதலான வழக்காறுகள் இவற்றைக் கற்றுத் தருகின்றன. எவ்வாறு வாழ வேண்டும்,எவ்வாறு வாழக்கூடாது என்பன போன்ற நடத்தை விதிகளையும் அவை கற்றுத் தருகின்றன.