“இதை எல்லாம் விடு மது. இப்ப உன் மனதைத் தொட்டுச் சொல்லு. இது
போல் ஒரு பிரச்சனை எனக்கு இருந்தால், நீ என்னை விட்டுப் போய்விடுவாயா?”
“பட்டூ... நான்... என்னை ... நீங்க புரிந்து கொள்ளவே இல்லையே மாமா.”
“என்னடி புரிந்து கொள்ளவில்லை?” “நான் எப்படி என்று உங்களுக்குத் தெரியாதா?”
“அப்ப நான் மட்டும் எப்படிடி. எனக்கும் நீ மட்டும் தானே முக்கியம்.
“உங்களுக்குச் சரி, உங்க அம்மா... அவங்களுக்கு...?"
"நீதான் மருமகள் என்று சொல்லிட்டாங்க.”
'உண்மைதானா?' என்று யாசித்தது அவளது கண்கள்...