கல்வியே மனிதப் பண்பாட்டுவளர்ச்சிக்கும் நாகரிகவளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது. 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பது ஔவையார் வாக்குமேலும் 'கல்வி கரையில கற்பவர் நாள்சில' என்றும் உரைத்தார். கல்வியில் சிறந்தவரை மேலவராகக் கொண்டாடுவது வழக்கம். எந்தக் கல்வியானாலும் அதனைக் கற்பதற்கு மொழி தேவை. ஆகவே மொழியைப் பிழையறத் தெளிவாகவும், எளிமையாகவும், ஆற்றொழுக்காகவும் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் வழியே பாடக் கருத்துகளை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றவற்றைத் தெளிவாக அனைவருக்கும் எடுத்துச் சொல்வதும் கல்வியின் பயனாக இருக்கின்றது.