வேணுகோபால் சந்திரசேகர், ஒரு டேபிள் டென்னிஸ் வீரர். அகில உலக புகழ் பெற்ற ஒரு தேசிய சாம்பியன். தனது விளையாட்டு வாழ்வின் உச்சத்திலிருந்த போது, மூட்டு அறுவை சிகிச்சைக்காக சென்றவர், திரும்பி வந்த போது ஏறக்குறைய குருடனாய், செயல்பட இயலாதவராய் திரும்பினார்.
சாம்பியனாய் இருந்தவர், உதவியற்ற ஒன்றுமில்லாதவராய் ஆகிவிட்டார்.
இப்போது அவர் டேபிள் டென்னிஸில் அவரது லட்சியத்தை அடைய தினந்தோறும் போராட்டத்தை தொடர்கிறார்.
ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் 'சாதிக்க வேண்டும், சவால்களை வெல்ல வேண்டும்' என்ற எண்ணங்களைத் தூண்டி விடும் நூல் இது.