முதன் முதலில் மனிதத்தைக் கொஞ்சம் பகுத்தறிவோடு அணுகியவர்கள்
சித்தர்கள்தான். அதனால்தான் அவர்களை இந்தச் சமுதாயம் சற்றுத் தள்ளியே
வைத்திருக்கிறது. சித்த நெறி என்பது அன்பு நெறிதான். அதுவே மனிதத்துக்கான
அடிப்படை வழியுமாகும். இறுதியில் மிஞ்சுவதும் எஞ்சுவதும் மனிதம் மட்டுமே.
இதைச் சித்தர்கள் நன்றாகப் புரிந்திருந்தனர்.
சித்தர்கள் காட்டிய அறம், பொருள், மனிதம் ஆகிய மூன்று பாதைகளில் நம்மையும்
அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம். இந்த மூன்று பாதைகளும் இளைய
தலைமுறையினர் நன்னெறியில் நடைபயில உதவும்.