குமுதத்தில் வெளியான இந்தக் கதையை அழகிய முறையில் பதிப்பித்துள்ள அல்லயன்ஸ் பதிப்பகத்துக்கு மிக்க நன்றி அவர்களுடன் என் மதிப்பிற்குரிய சம்மந்தி காலம் சென்ற எஸ். ராஜகோபாலனுக்கு நன்றி. திருவனந்தபுரம் ஏஜிஸ் அலுவலகத்தில் ஆடிட்டிங் துறையில் பணியாற்றி, கேரள மாநிலம் முற்றிலும் அறிந்திருந்த அவர், என்னை எர்ணாகுளத்துக்கும், சோட்டாணிக்கறை பகவதி அம்மன் கோயிலுக்கும் அழைத்துச் சென்று விவரங்களும் கூறினார்.