''மாமன்னன் என்று அழைக்கப்படும் ராசராச்சோழன் அற்புதமான கட்டிட கலைஞர்களையும், மழைக்கு ஒதுங்க கூட பள்ளிக்கூடம் இல்லாத அந்த கால தொழில் நுட்ப வல்லுநர்களையும்,பெயரும்,முகவரியும் தெரியாத ஆயிரக் கணக்கான, தொழிலாளர்களையும் கொண்டு உருவாக்கிய பெரிய கோவில் பார்ப்போரை பரவசப்படுத்துகிறது. நமது பாரம்பரியத்தின் முன்னோடி தமிழர்களின் பேராற்றல் அவர்களின் இந்த சாதனைக்காக நம்மை தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறது. ஆனால் ராசராச சோழனையோ அல்லது பெரிய கோவிலையோ நினைவு கூர்வது இது மட்டும் தானா? அதற்கு இந்த காலத்திற்குள்ளும், களத்திற்குள்ளும் சற்றே நிலா படியில் குனிந்து நாம் உள்ளே புக வேண்டி இருக்கிறது.
மாமன்னன் இராசராச சோழனைப் பற்றி மட்டும் குறித்து இந்நூல் எழுதப்படவில்லை. அக்காலத்தில் நிலவிய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மனிதர்களை மனிதர்களாக அல்லாமல் கொத்தடிமைகளாக நடத்திய விதம்; பெண்களின் நிலை போன்ற பல்வேறு கோணங்களில் இந்நூல் ஆய்வு செய்கிறது.