"அருட்பா" என்றாலே வள்ளற்பெருமான் படைத்த திருவருட்பா நூல்தான் என்று இன்றைய அறிவுலகம் முரசறை வதைக் கேட்டு நெஞ்சு நெகிழ்ந்து போகின்றோம்.
அமைந்த ஆறுதிருமுறைகளுமே தேனூற்றில் ஊறிக்கிடந்த பலாச்சுளைகள் போல் சுவையின்பம் தருபவை தாம்; அவற்றுள் இரண்டாம் திருமுறையென்பது, 'புண்ணிய விளக்கம்' முதல் 'முன்னமுடிபு வரை நூற்றுப் பதின்மூன்று கருப்பொருள்களைக் கொண்டு இயற்றப்பட்டதாம்; இம்முறையில் ஆயிரத்து இருநூற்று ஏழு பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.