கதைகள் என்று மட்டுமே எடுத்துக்கொண்டால் ரசிக்கலாம். கதை வாயிலாக பல பாடங்கள் என்று எடுத்துக்கொண்டதால், முடிவின்றி கற்றுக் கொண்டே போகலாம்.
நடைமுறைக்கு உதவாத, நம்மால் பரீட்சித்துப் பார்க்கமுடியாத விஷயம் என்று இதிலே ஒன்றுகூட இல்லை.
பௌத்தத்தை அடிநாதமாகக் ,கொண்டிருக்கும் ஒரு தத்துவப் பிரிவு ஜென். எத்தனை கனமான சங்கதியையும் எளிமையாகவும் இனிமையாகவும் முன்வைக்கமுடியும் என்பதை ஜென் கதைகள் நிரூபித்துள்ளன். மொழி, கலாசாரம், சமயம், இனம் கடந்து அனைவரும் கொண்டாடும் ஒரு வாழ்க்கைத் தத்துவமாக ஜென் நீடிப்பதற்கு இது முதன்மை காரணம்.
வெறுமனே உயிர்த்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஜென் குரு வாழ கற்றுக்கொடுக்கிறார். கசப்புகளை விழுங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இன்பங்களைக் கற்றுக் கொடுகிறார். சிறப்பாக வாழ்பவர்களுக்கு உன்னத்தை வழங்குகிறார்.
கதைகள் நூறு. கற்க வேண்டிய பாடங்கள் சில ஆயிரங்கள்