மயிலை சீனி. வேங்கடசாமியின் இந்நூல் தமிழர் வளர்த்த கலைகள் அனைத்தையும் மையமாக வைத்து நம்மோடு உரையாடுகின்றது. நலிந்து வரும் கலைகளுக்காக ஆதங்கப்படுகிறது. நம்மை பழங்காலத்திற்கே மீண்டும் அழைத்து செல்கிறது. அக்காலம் நமக்கு நவீனமாகிறபோது சிற்பங்கள் உயிர்பெறுகின்றன. இசை நம்முள் பேரொலி எழுப்பிக் கூத்திடுகிறது. இராப்பொழுதுகளில் மதிகூட நாணுகிறது. வான்தொட்டு நிற்கும் அழகுக் கட்டடங்களில் புள்ளினங்கள் அவற்றல் வீடுகட்டி வாழ்வையோட்டுகின்றன.
ஒவ்வொரு புலனாலும் நுகர நம் மூதாதையன் பல்வேறு கலைகளையும் உருவாக்கி வைத்ததைப் போற்றிப் பாதுகாப்போம். அதற்கு முதற்படியாக அமையும் இந்நூலை கற்றுத் தெளிவது வாசகர்களுக்கும் பெருமை. அத்தகையதோர் சிறந்த தமிழனை உருவாக்குவது எங்கள் பதிப்பகத்தின் கடமை.
- பாவை பப்ளிகேஷன்