பரவல் முறை உள்ளூர்ப் பொருளாதாரம் வளம் சேர்ப்பதாகவும், வளர்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்து தருவதாகவும், இயற்கையைப் பேணுவதாகவும் இருக்கும் என்று அவர் நம்பினார். இயற்கையோடு இயைந்த எல்லைக்கு உட்பட்ட பொருளாதாரம் அழி வற்ற பொருளாதாரமாகப் பல்லாயிரம் ஆண்டுகள் தொடரும் என்பது அவருடைய நம்பிக்கை. குமரப்பா தனது கருத்துகளைத் தொகுத்து ‘அழிவற்ற பொரு ளாதாரம்’ என்ற நூலாக 1942ஆம் ஆண்டு வெளியிட்ட போது, மகாத்மா காந்தி அவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். அப்போது குசராத் வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் வேந்தராக காந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.