உணவே மருந்து’ என்ற ஹிப்போகிரேட்ஸ் கூற்றுக்கு ஏற்ப எவ்வகை உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால் நோயற்ற வாழ்வு வாழலாம் என்பதைத் துல்லியமாக தெரிந்துகொள்வது அவசியம். உணவுகளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தவிர பல்வேறு தாவரவேதியங்களும் உள்ளன. இவ்வகை வேதியங்கள் பலநோய்களைக் கட்டுப்படுத்தும் அல்லது தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றமுறையில் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். இக்கருத்துக்களை முன்னிருத்தி இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நாம் உட்கொள்ளும் உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் நோய் காக்கும் வேதியங்கள் பற்றி அறிந்து பயனடைவீர்கள் என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனி’.