மரபுவழி மருத்துவங்களின் தோற்ற காலத்திலிருந்தே உடலியல் பற்றிய
தெளிவான பார்வை நம் முன்னோர்களுக்கு இருந்தது. மரபுவழி மருத்துவங்களின்
உடலியல் அதன் இயக்கத் தன்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உடற்செயலியலை
மட்டுமே உணரவும், பயப்படுத்தவும் செய்தார்கள். பிற்கால மருத்துவங்கள் உடல்
அமைப்பியலை புரிந்து கொள்ள முயன்றன. நவீன ஆய்வுகள், அறுத்துப் பார்க்கும்
முறைகள் மூலமாக தெளிவான உடல் அமைப்பியலை நவீன அறிவியல் வெளிப்படுத்தியது.
மரபு அறிவியலின் உடற்செயலியல், நவீன சிந்தனைகளின் வழியாக முழுமையை
நோக்கி நகர்த்தப்பட்டது. ஆகப்பெரிய ஆராய்ச்சிகள் மனித உடலின் மீது நடந்து
கொண்டே இருந்தாலும் இன்னும் பல ரகசியங்களை தனக்குள் தக்க வைத்துக் கொண்டே
இருக்கிறது நம் உடல்.