ஒரு நூலை ஆழ்ந்து கசடற கற்று அவ்வழி ஒழுக வேண்டும். அப்போதுதான் அந்நூலின் உண்மை மெய்ப்பொருள் விளங்க ஆரம்பிக்கும். ஓளவைக்குறள் படிக்கும் உங்களுக்கு அச்சிரமத்தை இவன் கொடுக்கவில்லை. இந்நூலை ஆழ்ந்து உள்வாங்கிப் படித்தாலே போதும், உண்மை மெய்ப்பொருள் தெள்ளென விளங்கிடும்.
இதில் சொல்லப்பட்ட ஞானநுட்பம் பெற்றிட ஒரு மனிதனுக்கு மூன்று இலட்சம் வருடங்கள் ஆகும், இது அகத்தியர் சொன்னது. இந்நூல் நமது தமிழ் சமுதாயத்தின் பரம்பரைச் சொத்து. சாகாக்கலையினைக் கற்பித்த ஒரே இனம் தமிழினமே. ஆனால், இக்கலை அனைவருக்கும் பொதுவான கலையாகும். உயிராகப் பிறப்பெடுத்த அனைவருக்கும் இச்சாகாக் கலை போய்ச் சேர வேண்டுமென்ற ஜீவகாருண்ய எண்ணத்தால் இந்நூலுக்கு மெய்ப்பொருள் ஞாவுைரையை எழுதி முடித்துள்ளான்.