என் சுயமரியாதைக்கும் தனிமனித சுதந்திரத்துக்கும் எவ்ளோ பெரிய விலையைத் தரவும் நான் சம்மதிச்சிருக்கேன். எல்லா சுதந்திரமும் வலியில் இருந்தே தொடங்குது. வலிக்குப் பயந்தால் வாழ்க்கை முழுவதும் அடிமைதான். அந்த வலியை விரும்பி நானே ஏத்துக்கறேன், ஒவ்வொரு முறையும்....சொல்லாததும் உண்மை' தொடரில் சுதந்திரமான மனநிலையில் நிர்வாணமான உண்மைகளைப் பேசியிருக்கேன். உடைகளைக் களைவதற்கு காமம் மட்டுமே காரணமா இருக்கணும்னு அவசியம் இல்லை. இதுவரைக்கும் யாரிடமும் சொல்லாத உண்மைகளை, நெருங்கிய நண்பன்கிட்ட பகிர்ந்துக்கிற மாதிரி இந்த நூலை எழுதினேன் . நான் சொன்னதை சரியா புரிஞ்சிகிட்டதும், சொல்ல தவறியதை உணர்ந்து எழுத்தா மாத்தினதும் அவரோட பங்களிப்பு.