உலக
மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட பஞ்ச தந்திரக் கதைகள் சிறுவர்
முதல் முதியோர்வரை படித்துப் பயன் பெறத்தக்கவை. அறிவற்றவரையும்
அறிவாளியாக்கும் கதைகள் அடங்கிய இந்த நூலை எங்கள் தந்தையார் திரு. பழ.
சிதம்பரம் அவர்கள் வெளியிட விரும்பினார்கள். சக்தி காரியாலய அதிபர் திரு.
வை. கோவிந்தன் அவர்கள், முன்பு வெளியிட்ட இந்த நூலை அன்னாரின் மகன், மனைவி
திருமதி வள்ளியம்மை ஆச்சி ஆகியோரிடம் உரிமை பெற்று வைத்திருந்தார்கள்.
புத்தகம் வெளியாகும் சமயம் எங்கள் தந்தையார் இறைவனிடம் சேர்ந்ததால்
அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இப்போது நாங்கள் கதைகளுக்கு
தகுந்த படங்களை அங்கங்கே சேர்த்து வெளியிடுகின்றோம்.
வடமொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவரும், பிரபல சிறுகதை எழுத்தாளர் திரு.
மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் அவர்களின் மனைவியாருமான திருமதி அன்னபூர்ணா ஈஸ்வரன்
அவர்கள் அழகு தமிழில் தமிழாக்கம் செய்துள்ளார்.