இலக்கியத்தை இலக்கியமாகவே அணுக வேண்டும் என்று ஒரு கருத்து எப்போதும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இக்கருத்திலிருந்து வேறுபட்டு, இலக்கியத்தினைப் பல்வேறு சமூக - பண்பாட்டுப் படைப்புகளில் ஒன்றாகக் கருதி, நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், தொல்லியல், பண்பாட்டு நிலவியல், பண்பாட்டுச் சூழலியல் போன்ற சமூக அறவியல்களின் சிலவகைக் கருத்தாக்கங்களின் துணைகொண்டு, சங்க இலக்கியங்கள் பிரதிபலிக்கும் திணைசார் உலகினைப் புரிந்துகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக அமைந்த ஏழு கட்டுரைகள் ' சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்' என்னும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.