உலகம் தோன்றியது முதல், மனித நாகரிக வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு நாட்டின் கலாச்சாரம், மொழி, நடைமுறை பழக்க
வழக்கங்கள், உணவுவகைகள் போன்றவை நாட்டுக்கு நாடு வேறுபட்டே இருக்கும். ஆனால் தற்காப்பு கலையைப்பொறுத்தவரை, பயிற்சி செய்யும் முறை, நோக்கம் ஆகியவை வெவ்வேறாக இருப்பினும் அடிப்படை ஒன்றுதான். அது தற்காப்பு என்பதே. உதாரணமாக, ஜப்பானியர்கள் கலையான கோபுடோ இந்தியர்களின் கலையான சிலம்பம் என்ற இரு தற்காப்புக் கலைகளும் ஆயுதக் கலையே. இரண்டிலும் பயன்படுத்தப்படும் கருவிகள் ஏறத்தாழ ஒரே உருவமைப்பில் இருந்தாலும், இக்கலைகளின் நுணுக்கங்களும் செய்முறைகளும் முற்றிலும் மாறுபட்டவையே. இது போன்று பல கலைகளின் விஷயங்களை ஆதாரப் பூர்வமாக விளக்குவதற்காகவே, இப்புத்தகம் எழுதப்பட்டாலும் ,இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு. தற்காப்புத் துறையில் மலிந்து விட்ட போலிகளிடம் நம் நாட்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதே இப்புத்தகம் தான் எழுத காரணம். தற்காப்புத் துறையில் குறிப்பாக கராத்தே கோபுடோ கலையில், உயர்வதற்கு உதவி புரிந்த நண்பர்கள் அருள்மணி, லோகநாதன் மற்றும் ரமேஷ் அனைவருக்கும் என் மனமார்ந்தநன்றி.
- கோபுடோ ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.