புலம்பெயர்ந்தோர் இலக்கியம் , சமகாலத் தமிழ் இலக்கியத்தில் தனித்த்தோர் இலக்கியப் பகுதியாக உருவாகி வளர்ந்திருக்கிறது. புலம் பெயர்ந்தோர் இலக்கியம் ,தமிழ் இலக்கியத்தின் எல்லையை நாடுகளைக் கடந்து விசாலப்படுத்தியிருக்கிறது. ஒரு வகையில் அது உலகம் தழுவிய படைப்பாக இருக்கிறது. தமிழர்களின் புலம்பெயர்வு வரலாற்றுக் காலந்தெட்டு நிகழ்ந்திருக்கிறது. ஆயினும் , தமிழ்ப் புலம்பெயர் இலக்கியம் என்பது 1980 களில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைகள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக, ஈழத்திலிருந்து தாயகம் துறந்து பல ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் படைத்த இலக்கியங்களையே இந்த புத்தகம் குறிக்கிறது.