வணக்கம் ஒரு மேலான சமூக நோக்கம் கருதியே இந்த 'ஞான பீடம் ' நூல் வடிவம் பெற்று உங்கள் கரங்களில் தவழ்கிறது.
கடவுளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் முதன் முதலில் மண்ணில் வாழும் மனிதர்களின் துயரங்களை நெஞ்சில் நிறுத்தி ,அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டறியத்தன்னை வருத்திக் கொண்ட தத்துவ ஞானி புத்தர். அவர் ஒரு மதபோதகர் இல்லை. தாழ்குலம் என்று பழிக்கப்பட்ட தலித்துகளுக்கு முதன்முதலில் கோவில் வாசலில் காலெடுத்து வைக்க நாராயணபுரத்தில் கதவுகளைத் திறந்து வைத்த கலகக்காரர் இராமானுஜர். மனித ஒழுக்கத்தில் கவனம் செலுத்தியவர் புத்தர். சாதிச் சமத்துவத்தில் இதயத்தை ஈடுபடுத்தியவர் இராமானுஜர். இந்த இருவரைப் பற்றிய செய்திகள் எல்லாக் காலங்களி லும் சமூகத்தின் கடைசி மனிதன் வரை சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பம். அந்த விருப்பத்தின் விளைவுதான் இந்த 'ஞானபீடம் '.
- பதிப்பகத்தார்.