முத்துராமலிங்கபுரம் பாவலர் இல்லம் திரு. ரா. பொன்ராசன் குழந்தை இலக்கியத்திற்காகத்த தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு நல்லாசிரியர்.
குன்றக்குடி அடிகளாரின் உள்ளம் கவர்ந்த படைப்பாளி.
தமிழகம் முழுவதும் குழந்தைக் கவிஞர் எனப்போற்றப்படும் அமர்ர். அழ. வள்ளியப்பாவின் அத்யாதந்த சீடர்.
அவர் பல திருக்குறள்களை தேர்ந்தெடுத்து அவற்றிற்கேற்றவாறு குழந்தை பாடல்கள் இயற்றியுள்ளார்கள். அதனுடைய தொகுப்பே இந்நூல். இப்பாடல் படிப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளதால் குழந்தைகளை மிகவும் கவரும். குறளை மனதில் பதிவைக்கத்தூண்டும் பாடல்களாக அமைந்துள்ளது. அவ்வாறு சிறப்பாகத் தேர்ந்தெடுத்துப் பாடல்களை இயற்றியுள்ளார். அனைவரும் இதனைப் படித்துப் பயன் பெறுவோம்.
அன்புள்ள
T.R. தினகரன்