வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தைத் தரிசித்திட வேண்டுமென்பதில் மனித இனம் எப்போதும் ஊக்க முடையதாகவே இருந்து வந்திருக்கிறது. இது தான் நேடல் என்பது. ஜீவிதத்தின் இலட்சியமான ஆன்மத் தத்துவத்தை நோக்கிய யாத்திரையில் இந்தச் சாஸ்திரங்களின் சகாயம் மகத்தானது. உண்மையான தேடல் கெண்ட சாதகர்களுக்குச் சரியான திசையைக்காட்டி வழிநடத்திச் செல்வதில் குருவுக்கு அடுத்தபடியில் இருப்பது இந்தச் சாஸ்திரங்கள்தாம். அந்த வகையில் சாஸ்திரங்களைக் கற்கப் புகும் சாதகர்களுக்குச் சங்கரரால் இயற்றப்ட்ட தத்வ போதம்' எனும் இந்நூல் அந்தச் சாஸ்திரப் பெட்டகங்களைத் திறப்பதற்கு உதவும் ஒரு சாவியைப் போன்று உதவும் என்பதில் எள்ளளவும் ஜயமில்லை. தத்துவத்தைப் படிக்க விரும்புகிறவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டியது இதுவே எனப் பல ஆன்மிகப் பெரியவர்கள் கூறியிருப்பதிலிருந்தே இந்நூலின் மகத்துவத்தை அறியலாம். அனைவரும் படியுங்கள்; பயன்பெறுங்கள்.
- பதிப்பகத்தார்.