அன்புப் பெரியோர்களே வணக்கம் பல கோடி. இந்தியாவில் காசி, திருப்பதி, காஞ்சிபுரம், பண்டரிபுரம், இராமேஸ்வரம், போன்ற
புனித க்ஷேத்திரங்களில் ஒன்றுதான் சீரடி. அங்கு வாழ்ந்திருந்து இன்றும் ஞான சரீரத்துடன் விந்தை புரியும் புனித மகான்தான் சீரடி சாய்பாபா. அவரது வாழ்வில் எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. மனிதன் அன்பு, கருணை, இரக்கம், பரிவு, பண்பு, கடமை, உணர்வு, அடக்கம், பக்தி, தவம் , தியானம், ஞானம் சத்தியம், தர்மம் குருபக்தி போன்ற தெய்வீகப் பாதையில் பயணம் செய்வது எவ்வாறு என்பதைத் தனது வாழ்க்கையின் மூலமாகவும், அன்பர்கள் மூலமாகும், பல்வேறு லீலைகளை நிகழ்த்திக் காட்டிப் போதித்துள்ளார் சாயிபாபா. வாக்குத் தவறக்கூடாது. எப்போதும் விழிப்புடன் இருங்கள் போன்றவைகளை பல்வேறு சம்பவங்களின் மூலமாக எடுத்துரைத்தும், அதை நிஜ வாழ்க்கையில் நிகழ்த்தியும் காட்டிய தெய்வீகச் சொரூபர் சாயிபாபாவின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளைத்தொகுத்து உங்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வாய்ப்பை தந்தது மிக்க மகிழ்ச்சி.
- பதிப்பகத்தார்.