வெடி மருந்துகள் சட்டம், வெடிபொருள்கள் சட்டம் என்ற இந்த இரு சட்டங்களும் ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டபோது, இங்கிலாந்து நாட்டியலிருந்த சட்டங்களைத் தழுவி இயற்றப்பட்ட சட்டங்களாகும். வெடிமருந்துகள், வெடிபொருள்கள் ஆகியவற்றை உரிமம் பெற்றவர்கள்தான் வைத்திருக்க முடியும் ,பயன்படுத்த முடியும், விற்பனை செய்ய முடியும். வெடிமருந்துகள், வெடிபொருள்களை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டில்லாதபோது, அதனை எவரும் வைத்திருந்தால் அது குற்றமாகும் அந்தக் குற்றத்தின் பேரில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். வெடிமருந்துகள், வெடிபொருட்கள் என்பன நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். அவைகளைத் தவறான வகையில் பயன்படுத்தக்கூடாது.