ஒவ்வொருவருக்கும் ஒரு '' தத்துவம்'' இருக்கிறது என்று கூறினால் வியப்பாக இருக்கும். ஏனென்றால் தத்துவம் என்பது ஒருவர் உலகைப் பார்க்கும் முறையாகும், உலகைப் பற்றிய ஒருவரின் கண்ணோட்டமாகும். நம் எல்லோருக்கும், எது சரி, எது தவறு, எது நல்லது எது கெட்டது என்று ப பிரித்துப்பார்க்கத் தெரியும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இருப்பினும், இவையெல்லாம் மிகவும் சிக்கலான பிரச்சனைகளாகும், இவை வரலாற்றில், மாபெரும் மனிதர்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பிரச்சனைகளாக இருந்துள்ளன...