பத்திரிக்கை உலகத்தில், கற்பனைப் பாத்திரங்களுக்கென்று, காலங்காலமாகவே ஒரு முக்கியத்துவம் உண்டு. சுயமுன்னேற்றக்
கட்டுரைகள் சார்ந்த இதழ்களுக்காக அப்படி உருவான கற்பனைப் பாத்திரம் தான், பொதுவாச் சொல்றேன் -புருஷோத்தமன். இவர்
வலம்வந்த இதழிலும் சரி, இப்போது வலம் வரும் இதழிலும் சரி, உண்மையாகவே ஒரு மனிதர் இந்தப் பெயரில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திவிட்டார். பொதுவாச்சொல்றேன் என்ற தலைப்பில் புருஷோத்தமன் என்பவர் எழுதுகிற கட்டுரை என்று சிலர் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள் . சமூக நடப்புகளை மையப்படுத்தி, பொதுவிஷயங்களை பேசி, அதிலிருந்து புதுவிஷயங்களைச் சொல்ல புருஷோத்தமன் என்கிற பிம்பம் பெரிதும் உதவி வருகிறது. கனமான விஷயங்களும் எளிய தனையில் சொல்லப்படும் போது இன்னும் அழமாக இதயத்தில் பதிகிறது என்று என் நம்பிக்கை இதே புனைபெயரில் நமது நம்பிக்கை இதழில் தொடர்ந்து எழுதி வருகிறேன். இவற்றைத் தொகுத்து நூல்வடிவம் தரும் கற்பகம் புத்தகாலத்தாருக்கு என் நன்றிகள்.