பழங்குடி மக்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? சமுதாய மாற்றத்தில் அவர்கள்
மட்டும் தனித்து விடப்பட்டது எப்படி? அவர்களை இணைத்துக் கொள்ளாமல் நாட்டின்
வளர்ச்சி சாத்தியமாகுமா?
குறும்பர்கள் கோட்டை கட்டி ஆண்ட அரச குடியினர். அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து இப்போதும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய
பண்பாட்டுக் கூறுகள் உள்ளன. காலின் மெக்கன்சியின் சுவடிகள் கூறும் தமிழகப் - I பழங்குடி மக்களின் வாழ்க்கையும் வரலாறும்
இந்நூலில் வெளிப்பட்டுள்ளன.