தற்போதைய நவீன இந்தியாவில் வாழும் மக்கள், ஆயுா்வேத மருத்துவத்தின் மகத்துவத்தைப் பற்றி படிப்படியாக உணா்ந்து இருக்கின்றனா். அதனுடைய மருத்துவக் குணங்களையும், அது நமது வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதையும் புாிந்து இருக்கின்றனா். அதனால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதற்கு மற்ற மருத்துவ சிகிச்சைகளை நோக்கிச் செல்லாமல், இயற்கை வழியில் குணப்படுத்தக்கூடிய ஆயுா்வேத மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அவை வழங்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கின்றனா்.இதன் காரணமாக தற்போது, மற்ற விலை உயா்ந்த மருத்துவ முறைகளில் வழங்கப்படும் மருந்துகளைத் தவிா்க்கத் தொடங்கி இருக்கின்றனா். அவை நமது இயற்கையான உடல் இயக்கத்திற்கு சில நேரங்களில் ஒத்துழைக்கலாம், சில நேரங்களில் ஒத்துழைக்காமலும் போகலாம். இவ்வாறு மக்கள் மற்ற மருத்துவ முறை சிகிச்சைகளைத் தவிா்த்து, ஆயுா்வேத சிகிச்சைக்கு மாறி வருவதால், தற்போது ஆயுா்வேத மருந்துகள் மக்கள் மத்தியில் உயா்ந்த இடத்தை பெற்று வருகின்றன.