குழந்தைப் பருவம் என்பது தான் பார்ப்பதையும் கேட்பதையும் அப்படியே நம்பிச் செயலாற்றும் பருவமாகும். அவர்கள் இயல்பாகவே கதைகள் கேட்பதில் மிகுந்த விருப்பம் உடையவர்கள். அவர்களுக்குக் கதைகளோடு சிறந்த நீதிகளையும் மனதில் பதியச் செய்தால், அது அவர்களின் வாழ்நாள் வரையும் மனதில் பதிந்து தக்க சமயத்தில் கை கொடுக்கும். இதனால், அவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன் (creativity), ஆகியவை வளர உதவியாக இருக்கும். மேலும் சிறப்பான உரையாடல், பேச்சு, ஆளுமைத்திறன் , சூழ்நிலைக்கேற்றவாறு முடிவுகள் மேற்கொள்ளும் திறன் ஆகியவற்றையும் குழந்தைகளிடம் நாம் வளர்க்க முடியும். குழந்தைகளுக்கான் சிறந்த நீதிகளை எளிய கதைகள் மூலம் சொல்வதில் 'பேரறிஞர் ஈசாப் ' அவர்கள் மிகவும் தேர்ந்தவர். அவருடைய ஈசாப் கதைகள் சில எளிய தமிழில் இங்கு தொகுக்கப்படுகிறது.