கொங்கு வட்டாரப் பகுதிகளில் வாழ்ந்துவரும் எளிய மனிதர்களின் அசலான வாழ்க்கையிலிருந்து பெறப்பட்ட சிறுகதைகளடங்கிய தொகுப்பு.
அக்காலங்களில் வேளாண்குடிமக்களின் வாழ்க்கையோடுப் பிணைந்திருந்த அவர்களின் நிலத்துக்கும் மாடுகளுக்குமான உறவின் ஆழத்தைச் சொல்லும் கதைகளுடன் அம்மக்களின் சடங்குகள் சம்பிரதாயங்கள், வழிபாடுகள், நம்பிக்கைகளையும் சொல்வதோடு நகரமயமாதலின் விளைவால் எளிய மக்கள் சந்திக்க நேர்ந்த சங்கடங்களையும் வாழ்வுச் சிதைவையும் இக்கதைகள் பேசுகின்றன.