ஜி.யெஸ், ஒரு ப்ரீலான்ச ப்டோக்ராபர். அருணா என்கிற ஒரு குட்டி சினிமா நடிகையை புகைப்படம் எடுப்பதற்காகச் செல்கிறான். அவளுடன் பேசிப் பழகி அவளது புத்திசாலித் தனத்தால் ஈர்க்கப்படுகிறான். இரண்டு நாள் சந்திப்பிலேயே இருவரும் காதல் வயப்பட்டு கல்யாணம் வரை பேசிகொள்கிறார்கள். கல்யாணத்துக்குத் தடையாக அருணாவின் வாழ்கையில் ஒரு சிக்கல் இருக்கிறது. உடனடியாக அதை களைந்து விட்டு வருவதாக சொல்லிச் செல்கிறாள் அருணா. ஜி.யெஸ் காத்திருக்கிறான். அருணா வராததால் அவளை தேடிச் செல்கிறான். எதிர்பாரத அதிர்ச்சி அவனை தாக்குகிறது.