தியானம் என்பது நம் அனைவர் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்டது. ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி சராசரி மனிதர்களும் தியானம் பழகி வருகின்றார்கள். "டென்ஷனா? மனக்கவலையா? - தியானம் பழகி வா," என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நாளில், தியானத்தை விட்டு விட்டு ஞானத்துக்கு வாவென்று கூப்பிடும்போது, இது ஏதோ ஒரு முரண்பட்ட செய்தியாகவே தோன்றுகின்றது. ஆர்வமுடன் தியானம் பழகிவரும் உங்களிடம் தியானத்தை விடு என்று நான் கூறினால், நீங்கள் என்னை சும்மா விட்டுவிடுவீர்களா என்ன?