ஒரு பெண் வளர வளர தனக்குத் தானே புதிராகிறாள். ஓடி விளையாடும் சிறுபெண், பூப்படையும் நாளில் தன் தேகமாற்றம் கண்டு திகைத்துப் போகிறாள். மணம் முடித்து கருவுற்ற நிலையில், பேறுகாலம் வரை உணவும் உடலும் அவளுக்கு பிரச்சனையாகிறது. வாழ்க்கை அவளுக்கு அளிக்கும் புதிர்களை உணர்ந்தோ உணராமலோ கடந்து செல்கிறாள்.
இளம் பருவத்திலிருந்து மாதவிடாய் இழக்கும் வரையில் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் பற்றிய அறிவியல் உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும். கருவுற்ற காலத்தில் அவளுக்கு கரிசனமும் உரிய மருத்துவ ஆலோசனையும் தேவை. இவை அனைத்திற்கும் ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக அமைந்திருக்கிறது டாக்டர் திரிபுர சுந்தரி என்கிற பிரபல நாவலாசிரியர் லஷ்மி எழுதிய இந்த நூல்.
இது ஆண்களும் அவசியம் படித்துணர வேண்டிய நூல்.