
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Yakshan Thanimaiyil Oru Rajaangam
Free shipping over ₹500
இது ஒரு த்ரில்லர் நாவல், இந்த நாவலின் முடிவு ஆன்மீக கருத்தை
உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருகிறது. இந்த கதையில் வரும்
மர்மங்களுக்கு காரணமானவனை தேடும் பொழுது தடையாக கிடைக்கின்ற விடுகதை கீழே
வரும் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.’இறந்திருப்பான்
மீண்டும் பிறந்திருப்பான் தன் இரண்டு தாய்களையும் இழந்திருப்பான் பேச
பயன்படுத்துவதற்கு தலைவன் என்று அழைக்கப்படுவான், அவன் உலகினில் புதிதாய்
முளைக்கப்போகும் நாகரீகத்திற்கு முதல் எழுத்து ஆவான்’இந்த விடுகதையின் விடை என்ன? இந்த கதையில் வரும் மர்மங்கள் என்ன?இதனை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த நாவலை படியுங்கள்.இராம்சரண்
சுந்தர் நாவல் எழுதுவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் மிகவும் ஆர்வம்
கொண்டவர். அவர் ஒரு இயந்திர பொறியாளர், தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து
வருகிறார். அவர் இதுவரை நான்கு நாவல்களை எழுதி இருக்கிறார். அதில்
நான்காவதாக எழுதிய நாவல் முதலில் வெளியிடப்படுகிறது. அவருடைய ஆசை
நோக்கமெல்லாம் பல அறிஞர்களின் தத்துவங்களையும் ஆன்மீக கருத்துகளையும்
வாசகர்களுக்கு சலிப்பு தட்டாத வகையில் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும்
கொடுக்க வேண்டும் என்பது தான்.