திருமாலின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படுவது இராமன், கண்ணன்
அவதாரங்கள். கம்பராமாயனமும், வில்லிபாரதமும் இவற்றைப் பெருங்காவியங்களாகவே
பாடினர். கந்தபுராணம் முருகனின் அவதாரங்கள் குறித்துப் பாடியது போல,
திருமாலின் அவதாரங்கள் குறித்துப் பாடவேண்டும் என்னும் விருப்பத்தில்
தோன்றியதே பாகவதம்.இவர் நெல்லிநகரின் தலைவர். இயற்பெயர் வரதன். வரதராச ஐயங்கார் எனவும்
அழைப்பர். ‘நெல்லிநகர் வரதராசன்’ என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று
தெரிவிக்கிறது. 1-53 அளவில் பெரிய பாரதத்தை தமிழில் மிகப் பெரிய நூலாகச்
செய்து அருளியமையாலும், இப்படிச் செய்வதற்கு இறையருளைப்
பெற்றிருந்தமையாலும் இவரை அருளாள தாசர் எனச் சிறப்பிக்கப் பெற்றிருந்தார்.அருளாளதாசர் செய்த பாகவதப் புராணத்தில் 130 சருக்கங்களும், 9147 பாடல்களும்
உள்ளன. இது வடமொழியிலுள்ள 18,000 சுலோகங்கள் கொண்ட பாகவதத்தில்
சொல்லப்பட்ட செய்தி என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று கூறுகிறது.