விருத்ராசுரன் தமது உபசேனாதிபதிகளுக்கு யுத்த தர்மத்தை உபதேசித்தாலும் அவர்கள் அதை ஏற்க மறுத்து மிகுந்த அச்சத்திற்குள்ளாயினர். இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி தேவர்கள் அசுர சேனைகளைப் பின்புறமாகத் தாக்கி அவர்களை இங்குமங்கும் சிதறியோடச் செய்தனர். அசுரர்களின் பரிதாபமான நிலையைக் கண்ட விருத்ராசுரன் சினம் கொண்டு, தேவர்களைப் பார்த்து பின்வருமாறு பேசினார்: