பல நூற்றாண்டுகளைக் கடந்த பந்த நல்லூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பசுபதீஸ்வரர் அருள்புரியும் சிவாலயமும், இந்த பெருமாள் ஆலயமும் அடுத்தடுத்து அமைந்திருப்பது அரியும், சிவனும் ஒன்றே என்ற சொற்றொடரை மெய்பிக்கும் சான்று என்றே கூறலாம்.
இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மொட்டைக் கோபுரத்தைக் கடந்ததும் விசாலமான பிரகாரம். பலிபீடம், கொடிமரத்தை அடுத்து கருடாழ்வார் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தின் நுழைவாசலின் இருபுறமும் துவாரபாலகர்கள் நின்று கொண்டிருக்க, மகாமண்டபத்தின் உள்ளே நுழைந்தால் வலது புறம் ஆழ்வார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. அதனை அடுத்து ‘வெங்கடாஜலபதி, இரு தேவிகளுடன் தனிச் ச