இந்த வழிமுறை ஒரு தந்திர யோகமாகும். மும்மூர்த்திகளுக்கும் மேலான ஒன்று பரமசிவன் பார்வதிக்கு கூறுவது போல் அவர் பைரவர் என்றும் பைரவியிடம் கூறுவதுபோல் சொல்லப்பட்டது. அட்டாங்க யோக முறையில் இதுவும் ஒரு வகை. தியானப்பயிற்சில்
யோக நிலைகள், முத்திரைகள், யோக ஆசனங்கள், பிராண குண்டலினி சக்திகள்,
மந்திர ஜபம் முதலியன கூறப்பட்டுள்ளது. எல்லோருக்கும் மேலான பைரவரின்
இயல்புகள் பலவும் வேறுபடக் கூறியிருப்பதற்கான உண்மைகளும், பரம், அபரம்,
பராபரம் மூன்று சக்தி நிலைகளின் உண்மைகள்யாவும் பைரவர் பைரவியிடம்
விளக்குவதே மையப் பொருள். பைரவர்
எனப்படுவது சக்தி வாய்ந்த எழுத்தல்ல, மூன்று சக்தியோ, அர்த்த சந்திரன்,
நிரோதினி, நாத பிந்து, குண்டலினியோ அல்ல. இவை ஒரு குழந்தையின் குழந்தை
மனத்திற்கேற்ப அது நம்புவதற்காக உண்மை போன்று சில வற்றைக் கூறும் தாயின்
பேச்சு. யோகசாதகனைத் தூண்ட பயன்படும் சாதனம். கருத்து, காலம், இடம்,
காரணம், காரியம் எல்லாவற்றிற்கும் மேலானவர் பைரவர். ஆணவம் நீக்கி எல்லா
எண்ணங்களையும் நீங்கிய ஆத்மாவில் வெளிப்படுபவர் பைரவர். விமலனாய், எங்கும்
பரிபூரணமாய் நிறைந்தவராய் வடிவமில்லாதவராய் உள்ளவர் பைரவர். பைரவியும்
விதிவிலக்கு இல்லாதவளாய் அவருடன் சேர்ந்தே இருக்கும் சக்தி. அந்த பைரவரை
அடையும் வழிவகைகள் உடலில் உள்ள சக்கரங்களை மையமாக நினைத்து அதில் மனதை ஒரு முகப்படுத்தி தியானயோகம் மூலம் அறியலாம்.