குரு பார்வை இல்லை.
சுக்கிரன் நீசம்
செவ்வாய் தோஷம்
நாக தோஷம்
மூலம்
சரியான வரன் அமையவில்லை
பொருளாதாரச் சிக்கல். வரதட்சணைக்கு வழியில்லை.
இப்படியாக திருமணம் தடைபட எவ்வளவோ காரணங்கள். எதுவாகத்தான் இருக்கட்டுமே! ஆண்டவன் அருளிருந்தால் நாளென்ன செய்யும், கோளென்ன செய்யும்?
பக்தர்களின் குறை தீர்த்து அருள்பாலிப்பதற்காகவே கோயில்களில் குடிகொண்டிருக்கும் இறைவன் சில குறிப்பிட்ட திருத்தலங்களில் திருமண வரம் தரும் விசேஷத் தன்மை கொண்டு விளங்குகிறான். என்ன அதன் காரணம்? அந்தத் திருத்தலத்தின் மகிமை என்ன? அது எங்கிருக்கிறது? எப்படிச் செல்லவேண்டும்? அத்தலத்தில், திருமணம் கைகூடி வர என்ன செய்யவேண்டும்? நிவர்த்தி என்ன? பரிகாரம் என்ன? சகல விவரங்களையும் சிலிர்ப்பூட்டும் மொழியில் அழகாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் லக்ஷ்மி அம்மாள். படியுங்கள், பலன் பெறுங்கள்.