Zara-வுக்கு எழுத்தைக் கைப்பற்றத் தெரிந்து இருக்கிறது.அதில் தனது மகிழ்வை துயரை ஏக்கத்தை பதிவு செய்யவும் தெரிந்து இருக்கிறது. அதற்கு மூல காரணமாய் காதலை முன்னிருத்துகிறார். பிரதி முழுக்கத் தென்படும் எல்லாத் தொலைதல்களுக்கும் அடிப்படை காதலாகவே இருக்கிறது.
இப்படியான அந்த காதலுக்குரியவனை Zara அவாச்சியமானவன் என்று அடையாளப்படுத்துகிறார். அவாச்சியமானவன் ஒற்றை நபர் அல்ல. அவன் எல்லா ஆண்களுக்குள்ளும் மறைந்து இருக்கும் வேறொரு நபர். அவன் மீதான கொண்டாட்டமும், அவன் மீதான குற்றப் பத்திரிக்கையும், அவன் மீதான வாழ்த்தும், அவன் மீதான சாபமும் தான், Zara என்ற இந்தப் பெண்குரலின் தொகுப்பு.