தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்லாமல் இருபது வருடங்களுக்கு முன் தான் செய்தப் பாவச் செயலுக்கு பிராயசித்தம் வேறு செய்யச் சொல்லிவிட்டு மறைந்தார் .இனி என்ன செய்ய ?தனஞ்சயன் செய்யக் கிளம்பியிருக்கும் செயல் தந்தையால் பாதிக்கப் பட்டவர் வாழ்க்கையை மட்டுமன்றி அவன் வாழ்க்கையையும் அல்லவா மாற்றப் போகிறது ?