கண் மருத்துவர் முனைவர் இரா. கலைக்கோவன், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வர், பாண்டியர், சோழர் கால கோவில்களில் ஆய்வு நடத்தி பழங்கால ஆடற்கலை பற்றிய தகவல்களை சேகரித்து இருக்கிறார். 20 ஆண்டு உழைப்பில் உருவான நூலில் சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓவியங்களில் சில பெருமான் ஆடிய காரணங்கள், கலைஞர்களின் ஆடை நாகரீகம், இசைக் கருவிகள், வாழ்க்கை முறைகள், பாடகர்கள், நாடகசாலை, அரங்கம், மணவாழ்க்கை போன்ற அனைத்து விவரங்களும் ஆதாரங்களுடன் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 21/8/2013.