இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் திரு. க. கோபிகிருஷ்ணன் அவர்கள்
வாழ்க்கையில் ஓகோவென்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாற்பது நபர்களின்
வாழ்க்கை வரலாற்றையும், வறுமைக் கோட்டிற்கு கீழே நின்று வாட்டமுறும்
நாற்பது நபர்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஜாதக விளக்கங்களோடு எடுத்துக்
காட்டி, காரண காரியங்களை கிரக அமைப்புக்கேற்ப அலசி ஆராய்ந்து
எழுதியுள்ளார். சாதாரண அமைப்பைக் கொண்ட ஜாதகங்களை உடையவர்கள் தங்களை
உணர்ந்து, தங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமையும் என்பதை உணர்ந்து அதற்குத்
தக்கவாறு தங்கள் அணுகுமுறைகளை, பழக்க வழக்கங்களை அமைத்துக் கொண்டால்
'வறுமையிலும் செம்மை' என்பதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ முடியும். 'போகிற
வழியில் புதை குழி ஒன்று இருக்கிறது' என்று சொன்னால் பாதையைப் பார்த்து
நடந்து செல்வதுதான் உகந்ததேயொழிய 'அவன் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது'
என்று நடந்தால் அவஸ்தை உங்களுக்குத்தான். இந்த புத்தகத்தில்
காட்டப்பட்டுள்ள ஜாதகங்களைக் கொண்டு ஜோதிடம் கற்பவர்கள் முன்னேறலாம்.
அநுபவம் பெறலாம்.