தமிழ் நாட்டிலுள்ள மிகப் பெரும்பாலோராலும் விரும்பிக் கற்கப் பெறுவதும் ஆதாராமாகக் கொள்ளப் பெறுவதும் சாதக அலங்காரம் என்னும் சோதிட நூல் ஆகும். இந்நூலைசை செய்தவர் இன்றைக்கு 350 ஆண்டுகளுக்கு முன்னர், கீரனூரில் வாழ்ந்து வந்த நடராசன் என்னும் பெரியார் ஆவார். இந்த நூல் இயற்றிய காலத்தை சாலிவாகன சகம் 1587 ஆம் ஆண்டு விசுவாசி வருடம் என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார்.