டாக்டர். பால ஜோசியர் சுவாமி அவர்களை நாங்கள் முருகுஜோதிடக்கலை மாத
இதழாசிரியர் திரு.முருகு இராசேந்திரன் அவர்கள் நடத்திய பல ஜோதிட மாநாடுகள்,
யாகங்கள் ஆகியவற்றில் சந்தித்திருக்கிறோம். பழகுவதற்கு மிகவும்
இனிமையானவர்.
இவர் இளம் வயதிலேயே ஜோதிடத் துறையில் பிரபலம் அடைந்திருந்தாலும்,
தன்னைப்பற்றி விளம்பரப் படுத்திக்கொள்ள விரும்பியதில்லை. இவர்
ஆத்மார்த்தமாக நம்புவது ஜக்கம்மாவையே ஆகும். ஜக்கம்மாவின் அருளால் இவர்
சொல்லும் அருள்வாக்குகள் பலரை சிறப்பாக வாழ வைத்திருக்கிறது. enous
இவருக்கு குரு இவரது தந்தை A.P. ரங்கசாமி அவர் களே ஆகும். பால ஜோசியர்
சுவாமி அவர்கள் ஜோதிடத் துறையில் சுமார் 40 வருடங்களுக்கு மேல் அனுபவம்
வாய்ந்தவர். இப்பொழுதுதான் இவரது அனுபவங்களை புத்தகங்களாக வெளியிட வேண்டும்
என்று விரும்பினார். அதன் பயனாகத்தான் நாங்கள் இப்பொழுது அவரது நூல்களை
வெளியிடுகிறோம்.
இவருடைய புத்தகங்களை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நூல்களை வெளியிட உரிமை அளித்த திரு. டாக்டர் பால ஜோசியர் சுவாமி
அவர்களுக்கும், இந்நூல்கள் வெளிவர உதவியாக இருந்த நண்பர் முருகு
இராசேந்திரன் அவர்களுக்கும் எங்கள் நன்றி உரியதாகும். என்றும் போல் ஜோதிட
நூல் விரும்பிகள் இந்நூலையும் விரும்பிப் படித்து ஆதரவு தருவார்கள் என்று
நம்புகிறோம்.