இது கட்டடக் கலை பற்றிய அரிய பழங்கலை நூல். இதுவரை வெளிவந்துள்ள அநேக
மனையடி நூல்களுக்கு இதுவே ஆதாரமெனலாம். மனையடி சாஸ்திரம் சம்பந்தப்பட்ட
அனைத்து விவரங்களும் அடங்கிய முழுமையான நூல் இது ஒன்றே. தெய்வச் சிற்பி
மயனால் உருவாக்கப்பட்ட 'சிற்பரத்நாகரம்' எனும் இம்மனையடி நூல் கட்டடக் கலை
பற்றிய அனைத்து நுணுக்கங்களையும் மிகத் தெளிவாகக் கூறுகிறது. புதிதாக வீடு
கட்டப் போகிறவர்களுக்கும், ராசியின் அடிப்படையில் கட்டிய வீட்டைத் திருத்தி
அமைக்க விரும்புபவர்களுக்கும் இந்நூல் வழிகாட்டும். இதன் துணை கொண்டு வீடு
கட்டுபவர்களும், திருத்தி அமைப்பவர்களும் மிக்க சீரோடும், சிறப்போடும்
வாழலாம். கட்டப்படும் வீடுகளும் நீண்ட நெடுங்காலம் நிலைத்திருந்து பெயர்
சொல்லும்.