பாரதி இருந்த வீடு ' என்னும் இந்த மேடை நாடகம் திரு. பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் பூர்ணம் நியூ தியேட்டர் குழுவினரால்
பலமுறை மேடையேற்றப்பட்டு பாராட்டுகள் பெற்றது. எண்பது வயது நிரம்பும் வரை மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்த பூர்ணம் அவர்கள் அண்மையில் அடிக்கடி மேடை ஏறுவதை நிறுத்தியிருக்கிறார். இப்போதும் அவருக்கு அதிக ஆயாசம் தராமல் ஒரு நாடகம் எழுதிக்கொடுக்க எனக்கு ஆசைதான். பூர்ணம் அவர்களின் ஆசியுடன் அவர் குழுவின் இளைஞர்கள் 'குருகுலம் ' என்ற ஒரு குழுவை ஆரம்பித்து நாடகங்கள் எழுதி நடித்துப் பல பரிசுகள் பெற்றுவருகிறார்கள். இந்த நூல் என் மற்ற எல்லா நாடக நூல்களைப் போல திரு பூர்ணம் விஸ்வநாதன் அவர்களுக்குச் சமர்ப்பணம் . அவர் நூற்றாண்டு காண ஸ்ரீரங்கநாதனைப் பிரார்த்திக்கிறேன். ஆகாயம்' என்கிற ரேடியோ நாடகம் சென்னை வானொலியில் ஒரு முறை ஒளிபரப்பப்ட்டது. முயல், ஒரு பிரபலமான தொலைக்காட்சி நாடகத்தை தழுவி எழுதியது. இம்மூன்று வகைகளுக்கும் உள்ள வேறுபாட்டை அறிய இந்த நூல் உதவும்.
- சுஜாதா .